கல்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
கல்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் DCA/07/04/CB இலக்க 2026.04.10 திகதிய 03/2026 சுற்றுநிருபத்திற்கு அமைவாக, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரதேச ரீதியான கலாசார அதிகார சபைகள் கடந்த 10 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், கடந்த 2026.04.20ஆம் திகதியுடன் குறித்த கலாசார அதிகார சபைகளின் அதிகாரங்கள் அனைத்தும் […]