September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு – 2026 மற்றும் 26ஆவது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்)  மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வும் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு – 2026 எதிர்வரும் 16ஆம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்கான முன்னாயத்தப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் […]

Read More

கல்முனை மாநகரில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற முருகனின் சித்திரத்தேர் பவனி 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டிய  சித்திரத்தேர் பவனி இன்று (9) புதன்கிழமை காலை கல்முனை மாநகரில் பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சித்திரத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பிரதான வீதியினூடாக பவனி வந்தது. பெருந்திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து, முருகப் பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று “அரோகரா” முழக்கங்களுடன் முருகப் பெருமானை தரிசித்தனர். இடையிடையே பக்தர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது. […]

Read More

புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கு நாவிதன்வெளி உபதவிசாளரின் கெளரவிப்பு

சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் 5புலமைப் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த மூன்று மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் சமூக சேவையாளரும் ஆசிரியருமான கே. கண்ணதாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களான சிவானந்தன் கோவர்ஷனன், பகவான் அகிர்த்தன், ரமணன் பிரணியா ஆகிய மூன்று மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி செப்டம்பர் 11ஆம் திகதி

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் 45வது தேசிய இளைஞர் விருது வழங்கல் போட்டி – 2026 இன் கீழ், கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி நடைபெறவுள்ளது. இதன்படி, அறிவிப்பாளர் மற்றும் பேச்சுப் போட்டிகள் எதிர்வரும் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு, கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளன. இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, […]

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ள பிரதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. கொழும்பு நிரந்தர திரிபுடை மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷாங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழாமினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சதித்திட்டம் […]

Read More

வெற்றி நியூஸ் ஊடக பிரதானி தனோஷனின் தந்தை நண்பர் சிவாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

வெற்றி நியூஸ் ஊடக பிரதானி தம்பி தனோஷனின் தந்தை ஓய்வுபெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர் நண்பர் கந்தையா சிவானந்தம்( 61) ,ஜெயகலா(சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் மாவட்ட மீன்பிடி திணைக்களம் கல்முனை ) அவர்களின் கணவராவார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் மறைந்த திரு.கிருஷ்ணபிள்ளை அவர்களின் மருமகனும் , பிரபல வைத்தியர் கண்ணகை அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா மறைந்த டாக்டர் பரமானந்தம் அவர்களின் சகோதரருமான சிவாவிற்கு, Dr. டிவானிக்கா (ஆதார வைத்தியசாலை கல்முனை), […]

Read More

முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அவசர தலையீடு கோரி தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை

முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உரிமை தொடர்பில் ஜனாதிபதியிடம் அவசர தலையீடு கோரி தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை (ஷனா) அரச சேவையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்காத ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தெளிவான கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு தென்கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீம்தீன் அவர்களின் தலைமையில் அவசர மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் […]

Read More

இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம் பிடித்தவர் கலாபூஷணம், சாஹித்தியசூரி. ஏ.எல்.எம்.சலீம்

-செல்லையா பேரின்பraசா – இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம் பிடித்தவர் கலாபூஷணம், சாஹித்தியசூரி. ஏ.எல்.எம்.சலீம். அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூரில் அல்ஹாஜ் ஆதம்லெப்பை ஆமினா உம்மா தம்பதியினரின் இளைய புதல்வர் சலீம். தெட்ட பணிகளைத் துலங்க வைக்கும் செய்திச் செம்மல். காய்தல் உவத்தல் இன்றி கடவுளுக்கு சாட்சியமாக செய்திகளை ஒப்புவிக்கும் நீர்மையன். இன, மத, மொழி, பேதமின்றி ஊடக தர்மம் காத்த உத்தம புருஷன். மனித வாழ்வியல் பயணம் என்பது ஆயிரம் ஆண்டுகள் அல்ல. அது […]

Read More

புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கு நாவிதன்வெளி உபதவிசாளரின் மாதாந்த கொடுப்பனவு

(வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி  விவேகானந்தா மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் 5புலமைப் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்  புள்ளிகளை எடுத்த ஆறு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, நேற்று  சமூக சேவையாளரும் ஆசிரியருமான கே. கண்ணதாசன் தலைமையில் பொது மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர்  கே.புவனரூபன் தான் பதவியேற்ற காலம் முதல் தனது மாதாந்த கொடுப்பனவை பொதுமக்கள் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார். அந்த வகையில் தனது 7வது மாத கொடுப்பனவை புலமைப் […]

Read More

இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாகத் துணை நிற்கும்” – பாதுகாப்புத் துறை அமைச்சர்

ஹஸ்பர் ஏ.எச்- “இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும்” என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அவர் தனது முதலாவது இலங்கைக்கான  விஜயத்தின் போது இன்று (08) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். […]

Read More