தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கே.எம்.எஸ். நகைக்கடை பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு
பட்டிருப்பு விநாயகர் வித்தியாலயத்தில்இ புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், களுவாஞ்சிகுடி கே.எம்.எஸ். நகைக்கடை உரிமையாளரும் மனிதநேய செயற்பாட்டாளருமான கே.எம்.எஸ். அவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் எதிர்கால வெற்றியையும் ஊக்குவிக்கும் இத்தகைய சிறப்பான செயற்பாடு பாராட்டுக்குரியதாகும். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் அனைவரும் இணைந்து அவருக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். நிகழ்வில் பங்குபற்றிய வர்த்தக […]