நாடாளாவிய ரீதியில் 341 இளம் ஊடகவியலாளர்கள்; பொத்துவில் பிரதேசத்தில் ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவு
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஊடகத்துறையில் நாட்டமுள்ளவருமான செல்வி ஈஸ்வரன் தினேஸ்கா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொத்துவில் இன்பெக்டர் ஏத்தம் கிராமதம்தைச் சேர்ந்த இவர் சமூகப்பணிகளிலும் அதிகம் ஈடுபாடு உடையவர் இளம் ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் இணைந்து இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு […]