Category: பிரதான செய்தி

தேசபந்து தென்னகோனின் பொலிஸ்மா அதிபரின் பதவியை நிரந்தரமாக நீக்க சபாநாயகரிடம் பிரேரணை முன்வைப்பு

பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் நிரந்தரமாக நீக்குவதற்குரிய யோசனை ஒன்று சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 115 பேர் கையொப்பமிட்டு குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிககப்படுகிறது

உலக முத்தமிழ் மாநாடு மட்டக்களப்பிற்கு மறுக்கப்பட்டது ஏன்? மக்கள் கவலை; நடாத்த கோரிக்கை!

-வி.ரி.சகாதேவராஜா_ இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மட்டக்களப்பு மாநிலத்தில் நடாத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வராதிருப்பது ஏன்…

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய  ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு!

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு! இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும்…

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி!

இலங்கை தனது முதல் விந்தணு வங்கியை கொழும்பில் உள்ள பெண்களுக்கான மருத்துவமனையில் நிறுவியுள்ளது. இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது செயற்கை கருத்தரித்தல்…

உள்ளூராட்சி தேர்தல்: மே 6 இல் என அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும. மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட செயலகங்களுக்கு விடுத்துள்ளது.

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளுதல் இன்று (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும். ஏதேனும் ஆட்சேபனைகள்…

பால் மா பொருட்களின் விலைகளில் மாற்றம்!

பால் மா பொருட்களின் இறக்குமதியாளர்கள் ஏப்ரல் 1 விலையை 4.7% அதிகரிக்க முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை அண்ணளவாக ரூ. 50 உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!

அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம்,…

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாயை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் களத்தில்

‘அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்.’இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்ஆனந்த விஜேபால…

ஜனாதிபதிக்கும் IMF முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு! – இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கு இடையிலான நிகழ்நிலை சந்திப்பு வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது. 2023 மாரச் மாத்தில் ஆரம்பமான 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு (EFF)அமைவான ஒப்பந்தம்…