September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

பாண்டிருப்பு மகாவித்தியாலய நுழைவாயில் வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தின் 2006 ஆம் ஆண்டு GCE O/L பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் பாடசாலையின் நுழைவாயிலில் புதிய வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பாடசாலையின் அழகியமைப்பையும் அடையாளப் பெருமையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியுதவியையும் 2006 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கியுள்ளனர். அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பழைய […]

Read More

ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி Anura Kumara Dissanayake வியாழக்கிழமை (28) இரவு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசாங்க திணைக்களங்கள், […]

Read More

கனடா வாழ் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களின் மரநடுகை செயல் திட்டம் (2026)

“ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்”என்ற தொனிப்பொருளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வானது, இயற்கை அன்னையின் ஆசிர்வாத மழையின் மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது (23) கனடா மிசிசாகா புறோக்மிட் பார்க்கில் நடைபெற்ற போது, வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்கு பற்றி இந்நிகழ்வை சிறப்பித்துள்ளனர். வருகை தந்தவர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் நன்றி கூறப்பட்டதுடன், மர நடுகையின் முக்கியத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகை தந்த […]

Read More

காரைதீவு கண்ணகையின் பகல் சடங்கு பூஜை

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் மூன்றாவது நாள் (28)பகல் சடங்கு  பூஜையின்போது.. படங்கள் . வி.ரி.சகாதேவராஜா

Read More

கல்முனை – செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து  இன்று   கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில்  கனரக வாகனத்தின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு கொட்டப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும்  குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்செயற்பாட்டினை துரித கதியில் […]

Read More

இரசாயன வெற்று கொள்கலன்களை அகற்ற புதிய திட்டம் அறிமுகம் 

( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கிழல் கண்டத்தில் இந்த நிகழ்வு நேற்று முதல் முறையாக நடைபெற்றது. காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.  விவசாயிகளுக்கு […]

Read More

காரைதீவு பிரதான வீதி வடிகான்களின் நிலை : வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா?

காரைதீவு பிரதான வீதி வடிகான்களில் குப்பைகள்;   சிறு மழைக்கே வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா? (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியோர வடிகான்கள் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்பியுள்ளதால், சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் வடிகான்களில் நீர் சரிவர ஓடாத காரணத்தால், மழைநீர் வீதியில் […]

Read More

பழைய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்த வேண்டும்: 42 கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒருமித்த கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பில் 42 அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடலில் தேர்தல் முறை மாற்றம் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், பழைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணய […]

Read More

2021 இலிருந்து யாழ்- கதிர்காம பாதயாத்திரை பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது – பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .

 பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் . (  வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற  இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம்  பாதயாத்திரையானது 2021 இலிருந்து  பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது. இது சந்நிதி நிருவாகத்திற்கு தெரியாதா? இவ்வாறு கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் 7 மாவட்டங்களையும் 815 கிலோமீட்டர் தூரம் 58 நாட்களில் கடந்து வழிநடாத்தி வருகின்ற பாதயாத்திரைக்குழுத் தலைவருமான ஜெயா […]

Read More

தங்கள் நாட்டில் இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரானிய அதிபர் உத்தரவு!

ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் Masoud Pezeshkian உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமலில் இருந்த இணையத் தடைகளை படிப்படியாக நீக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சர்வதேச இணைய அணுகலை மீண்டும் வழமையாக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More