September 15, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

உரும்பிராய் கிராமத்தின் வரலாற்று நூல் – செம்பாட்டுச் சீமை வெளியீட்டு விழா 

செல்லையா பேரின்பராசா  . உரும்பிராயை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்பவருமாகிய பொறியியலாளர் எம் ரி. செல்வராஜா எழுதிய செம்பாட்டுச் சீமை என்ற உரும்பிராய் கிராமத்தின் சரித நூலின் வெளியீட்டு விழா 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம் தொடக்க உரை ஆற்றி நூலை வெளியிட்டு வைத்தார் .  […]

Read More

எபோலா பரவல் அச்சம்: இலங்கையில் விசேட கண்காணிப்பு ஆரம்பம்

எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையில் ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களுக்கு அமைவாக சுகாதார அமைச்சு தேவையான ஆயத்தத் திட்டங்களையும் ஒத்திகைப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டார். எபோலா தொற்று பதிவாகியுள்ள ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான […]

Read More

கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பு ஆதார வைத்தியசாலை ஆலய புனரமைப்புக்கு பங்களிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆலய புனரமைப்பிற்கான நிதியை திரட்டும் நோக்கில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆலய நிருவாகத்தினரும், அபிவிருத்திக் குழுவினரும் பொதுமக்கள், புலம்பெயர் உறவுகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நிதி உதவிகளை கோரி வருகின்றனர். இவ்வாறு கிடைக்கும் நிதியின் ஊடாக ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வைத்தியசாலை குழுவினரால் கல்முனை பிராந்திய இணையம் – கனடா […]

Read More

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை; மே 31 முதல் புதிய நடைமுறை அமல்

அரச நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கும் நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. அரச நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 31ஆம் திகதி முதல் அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குதல் […]

Read More

சிட்னி – சிலோன் லயன்ஸ் கழகத்தினர் கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க அன்பளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,  எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை 306 D10 மாவட்டத்தின் மட்டக்களப்பு நியூ செஞ்சுரி MJF லயன்ஸ் கழகத்தின் ஊடாக அண்மையில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம்  மற்றும் என்பு பேரறிவு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ப. கலாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அன்பளிப்பு […]

Read More

கிராமிய வழிபாட்டுச் சடங்குகளில் குத்தாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; சொற்பொழிவாளர் ஹரன்ராஜ்!

(வி.ரி.சகாதேவராஜா)சைவ மற்றும் கிராமியத் தெய்வ வழிபாடுகள் இடம்பெறும் ஆலயங்களில் சமகாலத்தில் DJ Remix குத்தாட்டம் எனும் போர்வையில் அரங்கேறும் கலாசாரச் சீரழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டியவை என்று பிரபல சமய சொற்பொழிவாளர் எஸ். ஹரன்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்று பெருமை பேசும் நாங்கள், எங்களுடைய கலாசாரத்திலும் பண்பாட்டிலும் சைவ விழுமியத்திலும் ஆலயங்களில் இடம்பெறும் கேளிக்கைக் கும்மாளங்களை அனுமதிக்கக் கூடாது. DJ Remix எனும் […]

Read More

இளம் சீட்டுக்களின் ராகம் 2026 சிறப்பாக இடம் பெற்றது.

புத்த சாசன மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம், மற்றும் கல்முனை சாஹரம் இசைக்குழு இணைந்து நடத்திய அம்பாறை மாவட்ட “இளம் சிட்டுக்களின் ராகம்” எனும் இன்னிசை பாடல் போட்டி நிகழ்வின் இறுதி நிகழ்வானது. நேற்றைய தினம்(30) நட்பிட்டி முனை பொது மைதானத்தில். கோலாகலமாக இடம் பெற்றது. 15 வயதுக்குட்பட்ட 13 இளம் போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தார்கள் முற்று முழுதாக சிறுவர்களை உள்ளடக்கிய. “இளம் சிட்டுகளின் ராகம் எனும் இன்னிசை பாடல் […]

Read More

கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகியின் அகவை நாள்  – இன்று 31.05.2026 – சிறப்பு கட்டுரை – கேதீஸ்

-கேதீஸ்- உலகம் அறிந்த யோகாசன கலாநிதி உலகை விட்டு 2008 மாசி மாதம் 6 ஆம் திகதி 96 ஆவது வயதில் மறைந்தாலும் எல்லோர் மனங்களிலும் இன்றும் வாழ்ந்த கொண்டிருக்கும் சவாமி சிதானந்த சரஸ்வதி யோகி ( காசிப்பிள்ளை சாமியார்) அவர்களின் ஜனன தினம் இன்றாகும். கல்முனையின் கருவறையாம் பாண்டிருப்பில் 1912 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 31 ஆம் திகதி இளையதம்பிக்கும் பெரியபிள்ளைக்கும் மகனாக பிறந்தார்.இவருக்கு பெற்றோர்கள் சூட்டிய பெயர் காசிப்பிள்ளை சிறுவயதில் தந்தையை இழந்ததால் […]

Read More

துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய ஊர்காவல் நிகழ்வு

செல்லையா பேரின்பராசா வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உற்சவத்தின் விசேட நிகழ்வுகளில் ஒன்றான ஊர்காவல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. இவ் ஆலய பிரதம பூசகர் சிவத்திரு க.ஜமுனாகரன் உதவி பூசகர் த.சசிகரன் ஆகியோர் ஊர்காவல் நிகழ்வு பூசைகளை நடாத்தினர், இந் நிகழ்வில் பல கலாசார நடனங்களும் இடம்பெற்றது.

Read More

“பச்சை கட்டல்” என்றால் என்ன? கண்ணகி அம்மன் சடங்கில் பக்தியும் பகிர்வும் கலந்த பாரம்பரியம் – வி.ரி.சகாதேவராஜா

கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமிய ஆலய மரபுகளில் இடம்பெறும் பல்வேறு சடங்குகள் சமூக ஒற்றுமையையும் பக்திப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக “பச்சை கட்டல்” எனப்படும் மரபுச் சடங்கு காணப்படுகிறது. பச்சை கட்டல் என்பது பொதுவாக கண்ணகி அம்மன் சடங்கு நாட்களில் இடம்பெறும் ஒரு நேர்த்தி மற்றும் பகிர்வு சார்ந்த சடங்காகும்.  மேலும், பச்சைக் கட்டல் நிகழ்வு என்பது குறிப்பாக காரைதீவு கண்ணகையம்மன் ஆலயத்தில் சிறப்பாக 5 […]

Read More