க.டினேஸ்
சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய 25 மாணவர்களில் 21 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றுள்ளதுடன்
04 மாணவர்கள் புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026/09/09 அன்று பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.






