September 15, 2026

Blog Post

Kalmunai Net > 2026

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நிகழ்வு -கஞ்சி விநியோகம்!!

  (  வி.ரி.சகாதேவராஜா) தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  நேற்று (13) புதன்கிழமை மாலை காரைதீவிலும் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச  சபை தவிசாளர் சு.பாஸ்கரனின் ஏற்பாட்டில்   பிரதேச சபைக்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. முன்னதாக ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மௌன ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதில் இலங்கை தமிழ் […]

Read More

இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌனஅஞ்சலி!

இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌனஅஞ்சலி! ( வி.ரி.சகாதேவராஜா) ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபை மாதாந்த அமர்வில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் பதினொராவது அமர்வு இன்று (14)    வியாழக்கிழமை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அவர் […]

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா பயணமானார்!-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் (Xi Jinping) முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நேற்று (12) பிற்பகல் பீஜிங் நோக்கிப் பயணமானார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக விவகாரங்கள் குறித்து முதன்மையாகப் பேசப்படவுள்ள போதிலும், தாம் ஈரான் விவகாரம் தொடர்பில் சீனத் தலைவருடன் ஒரு “நீண்ட கலந்துரையாடலை” (long talk) மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் அணுவாயுதம் இருப்பதைத் தடுப்பதே தனது முக்கிய இலக்கு என்று தெரிவித்த அவர், […]

Read More

உகந்தமலை முருகனாலயத்தில் மே 19 இல் பாலஸ்தாபனம் – இவ்வருடம் கொடியேற்றம், திருவிழா,தீர்த்தம் இல்லை !!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. ஆதலால், இவ் வருட வருடாந்த ஆடிவேல்விழா நடைபெறமாட்டாது. அதாவது உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா,15 நாள் திருவிழாக்கள் மற்றும் தீர்த்தோற்சவம் என்பன இம்முறை நடைபெறமாட்டாது என்று ஆலய வண்ணக்கர் எம்டி. சுதுநிலமே திசாநாயக்க(சுதா)  தெரிவித்தார். எனினும், கதிர்காமத்தோடு ஒத்த ஆடிவேல் விழா உற்சவ காலத்தில்(15-29) பாலஸ்தாபனம் செய்த கூடத்தில் சாதாரண பூஜைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் […]

Read More

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு

பாறுக் ஷிஹான் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணிஇ தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ்  தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026.05.12) ம் திகதி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கறை மற்றும் சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கு பாராட்டப்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிகழ்வில் தர முகாமைத்துவ […]

Read More

சட்டசபையில் விஜய் அரசு பெரும்பான்மையை நிருபித்தது!

ஆதரவு 144 -எதிர்ப்பு22 -நடுநிலை5 தி. மு. க வெளிநடப்பு 2026 சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான Tamilaga Vettri Kazhagam (TVK) 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. முழு பெரும்பான்மைக்கு தேவையான எண்களை எட்டாத நிலையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), CPI மற்றும் CPM உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின.இதன் மூலம் TVK கூட்டணி பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்தது. பின்னர் முதலமைச்சராக பதவியேற்ற […]

Read More

தாதிய தினத்தில் சிறந்த சேவைக்கான பாராட்டை பெற்றனர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள்!

உலக தாதிய தினம் கல்முனை ஆதார  வைத்தியசாலையில் (12) கொண்டாடப்பட்டது.மேலும் ஒரு வார காலமாக பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்று வந்துள்ளது. இதில் இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வுகள் யாவும் தாதிய பரிபாலகர் திரு சசிதரன் அவர்களின் முழு பொறுப்பிலும், தலைமையிலும் நடைபெற்றுள்ளது. நேற்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக கலாநிதி சங்கரப்பிள்ளை சுஜேந்திரன்பேராசிரியர் ( சுகாதார விஞ்ஞானபீடம் கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களும்,  […]

Read More

இலங்கையில் 40 ஆண்டுகள் ஆன்மீக பணியாற்றிய சுவாமி ராஜேஸ்வரானந்த ஜி மகாராஜ்ஜிற்கு பிரிவு உபசார விழா

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை இராமகிருஷ்ண மிஷினில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று  இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா செல்லவுள்ளார். இலங்கையிலிருந்து பிரியாவிடை பெறவிருக்கின்ற இத்தருணத்தில், கொழும்பிலும், மட்டக்களப்பிலும், கொட்டகலையிலும் அவருக்கு மகத்தான பிரியாவிடை நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் தேதி மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷினுக்கு வருகை தர உள்ளார்.  அங்கு 17 […]

Read More

ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச ஊடகவியலாளர் வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்காக பிரதேச செயலகப் பிரிவிற்கும் ஒரு இளைஞர் அல்லது யுவதி வீதம் தெரிவு செய்யும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுதிகளுக்காக வழங்கப்படும் பயிற்சி,உள்ளடக்கப்படும் விடயங்கள் மற்றும் பயிற்சியின் போது அவர்களுக்கு வழங்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (11) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சில் இடம்பெற்றது. இப் பயிற்சி ஒரு துறையை மாத்திரம் வரையறுக்காது செய்திப் பத்திரிகை, […]

Read More

திருக்கோவில் பிரதேசத்தில் தெய்வீக சேவைத்திட்டத்தின் கீழ் இந்து ஆலயங்களின் ஆவணங்களை ஒழுங்குடுத்தும் வேலைத்திட்டம்!

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களின் ஆவணங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து ஆலயங்களின் ஆவணங்களின் ஒழுங்கு படுத்தும் நோக்குடன் திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது இந்நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ் மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஆலய ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் பாதுகாத்தல் தொடர்பான விடயங்களை மாவட்ட […]

Read More