September 16, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: admin

சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது!

“நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது வழங்கும் விழா” 2025ஆம் ஆண்டிற்கான நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையிலான தர முகாமைத்துவம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, 30.04.2026 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டாக்டர் ஆர். சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. “ஒவ்வொரு சிசுவுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான […]

Read More

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் விஜய்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜனாதிபதியின் அந்த வாழ்த்துச் செய்திக்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய், “இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு […]

Read More

வலயமட்ட போட்டியில் துறைநீலாவணை ம.வி.அணி கிரிக்கட் மற்றும் எல்லே போட்டிகளில் சம்பியனானது

-தி.சதீஸ்- வலயமட்ட போட்டியில் துறைநீலாவணை ம.வி.அணி கரிக்கட் மற்றும் எல்லே போட்டிகளில் சம்பியனானது பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான எல்லே விளையாட்டு சுற்றுப்போட்டியில் முதலாமிடம் பெற்று மாகாணமட்ட போட்டிக்கு துறைநீலாவணை ம.வி அணியினர் தெரிவானார்கள், அவ்வாறே கிரிக்கட் போட்டியிலும் முதலிடம் பெற்று சம்பியனாகியுள்ளது.உடற்கல்வி ஆசிரியர் றபி அஷாம் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் முரளிகிருஷ்ணா ஆகியோரின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் இந்த வெற்றியை பதிவுசெய்தனர்.

Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்; தம்பிலுவில் சந்தை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!!

( வி.ரி.சகாதேவராஜா) தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  இன்று அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட   உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று (12) செவ்வாய்க்கிழமை   திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்கு கஞ்சி காய்ச்சி முன்னாலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு மே 18 என எழுதப்பட்ட சிரட்டை யில் […]

Read More

ADMK இல் இருந்து ஒரு அணி முதல்வர் விஜய்க்கு ஆதரவு!

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக பிரதிநிதிகள் இன்று மாலை முதலமைச்சர் விஜய்யை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சில எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஆலோசனைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Read More

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்றையதினம்(12.5.2026) விசாரணைக்கு அழைத்துள்ளனர். கபில சந்திரசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றை அடிப்படையாக வைத்து தான் மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தற்போது உயிரிழந்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியில் பல உண்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கபில சந்திரசேன திட்டமிட்ட அடிப்படையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை […]

Read More

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்

பாறுக் ஷிஹான்ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவின்    நிந்தவூர் வருகையை முன்னிட்டு  அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான […]

Read More

எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (12) மாலை 5 மணி வரை செல்லுபடியாகும் […]

Read More

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு

பாறுக் ஷிஹான் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்இ விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பிராந்திய மேற்பார்வை பொதுச் […]

Read More

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற 46 ஆயிரம்  தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா!

( மட்டக்களப்பிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு   மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது . பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாநகர […]

Read More