September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு – 2026

சௌவியதாசன்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. எம். ஜீவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செல்வ விநாயகர் அறநெறிப் பாடசாலை, பாலமுருகன் அறநெறிப் பாடசாலை மற்றும் நற்பட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை ஆகியவற்றிற்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட இந்துக் கலாசார உத்தியோகத்தர் திரு. கு. ஜெயராஜி, பிரதேச இந்துக் கலாசார உத்தியோகத்தர் திருமதி க. சுஜித்திரா, திருமதி நா. சிறிப்பிரியா மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்து அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்துவதற்கும் இத்தளபாடங்கள் வழங்கும் செயற்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *