September 16, 2026

Blog Post

Kalmunai Net > 2026

கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி மட்டக்களப்பில் நடைபெற்றது

ஏ.எல்.எம்.ஷினாஸ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தினம் -2026, மாகாணமட்ட போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாண கல்விப் பணிப்பாளர் சார்பில் மாகாண கல்வி திணைக்களத்தின் கல்வி நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஆர்.நிமலரன்ஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சர்வ மத கலாசார பாரம்பரிய நிகழ்வுகளோடு அதிதிகள் மட்டக்களப்பு பிரதான நகரில் […]

Read More

காரைதீவில் தியாகிகள் தின நிகழ்வு- ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் நடைபெற்றது

( வி.ரி.சகாதேவராஜா) ஈழவிடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் ஞாபகார்த்தமான 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு,காரைதீவு  விவேகானந்தா விளையாட்டுக் கழகம்  நேற்று  (21) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடாத்தியது. காரைதீவில் உணர்வு பூர்வமாக நடந்த தியாகிகள் தினத்தில்  தோழர் பத்மநாபா மற்றும் உயிர் நீத்த தோழர்களின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர். காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் […]

Read More

நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி itf;fg;l;lJ குறித்த நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடங்கப்பட்ட இந் நிகழ்வு 18.06.2026 அன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ச.ரகுலநாயகி தலைமையில் பிரதேசசெயலாக முன்றலில் நடைப்பெற்றது. .இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளரும் உகனை பிரதேச செயலக பதில் கணக்காளருமாகிய திரு .கமறுத்தீன் […]

Read More

சர்வதேச யோகா தினம்: அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் 2,000 பேரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

செல்வி வினாயக மூர்த்தி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் யோகா தின நிகழ்வு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இதன்போது யோகாசனப் பயிற்சிகள் மற்றும் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன. […]

Read More

கல்முனையில் தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு

கல்முனையில் தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு பாறுக் ஷிஹான் இலங்கையின் கிழக்கு மாகாணம்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி  சந்தியில் சனிக்கிழமை(20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன் போது  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி […]

Read More

சாய்ந்தமருதில் போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

பாறுக் ஷிஹான் வீதி பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக   சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில்  இன்று(20)  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது  மோட்டார் சைக்கிள் ஆவணம்  காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது   தலைக்கவசம் அணியாது செல்வது , […]

Read More

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தின நிகழ்வு!

-செல்லையா பேரின்பராஜா- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தினம் 20.06.2026 சனிக்கிழமை மட்டக்களப்பு அலுவலகத்தில் இம் முன்னணியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. முன்னதாக தோழர் பத்மநாபாவின் உருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அகல் விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தோழர் விமலன் உட்பட பலர் கலந்து கொண்டு […]

Read More

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயம்; திருமாங்கல்யத்துக்கான திருப்பொன் உருக்கும் நிகழ்வு!

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் ; அன்னையவளின் திருமாங்கல்யத்துக்கான திருப்பொன் உருக்கும் நிகழ்வு நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆனி திங்கள் சுக்கிரவாரம் 26.06.2026 (வெள்ளிக்கிழமை) விசாக நட்சத்திரமும் சித்தயோகமும் மிதுன லக்கினமும் கூடிய காலை 9.35 மணி முதல் 10.20 மணி வரை உள்ள சுபமுகூர்த்த வேளையில் அன்னையவளின் திருப்பொன் உருக்கல் நிகழ்வு நடைபெறும். அன்னையவளின் பொன்னுருக்கலில் கலந்து கொள்வது பூர்வபுண்ணியமாகும். இத்தெய்வீக கைங்கர்யத்தில் நாமும் இயன்ற பங்களிப்பினை பொன் பொருளாக வழங்கி இறையருளை […]

Read More

கோலாகலமாக பெரியநீலாவணையில் கலாசார மையம் திறந்து வைப்பு – கிழக்கு ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

செல்லையா பேரின்பராசா.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியநீலாவணையில் பதினொரு மில்லியன் ரூபாவில் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று வெள்ளிக் கிழமை மாலை 19.06.2026 கிழக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கமைய கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்.சரவணமுத்து நவநீதனால் நாடா வெட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் […]

Read More

அமெரிக்கா-இஸ்ரேல் இடையே வெடித்த ராஜதந்திர மோதல்: ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!

​வாஷிங்டன், ஜூன் 19, 2026: ​அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), இஸ்ரேலிய அமைச்சரவைக்குக் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார். ​ஒப்பந்தம் ஏன் விமர்சிக்கப்படுகிறது? ஈரானின் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் இந்த அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்துவிட்டதாகவும், இது இஸ்ரேலின் தேசிய […]

Read More