September 19, 2026

Blog Post

Kalmunai Net > Uncategorized > அனோஜனின் விடுதலைக்காக நாளை (20) கையெழுத்து சேகரிப்பு!

அனோஜனின் விடுதலைக்காக நாளை (20) கையெழுத்து சேகரிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக, கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்பு மன்றாட்டம் நடைபெறவுள்ன.

இனம், மதம், மொழி கடந்து மனிதாபிமானத்துடன் ஒரு உயிரைக் காக்க கரம் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அனோஜனின் விடுதலைக்காக பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரிக்கப்படுவதுடன், அவருக்காக குரல் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

📅 திகதி: 20.09.2026 – ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி
📍 இடம்: நற்பிட்டிமுனை ஓராம் கட்டை சந்தி

அனைவரும் கலந்து கொண்டு, அனோஜனின் விடுதலைக்கான மனிதாபிமான முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *