பஸ் கட்டணம் குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் சாதாரண பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போதுள்ள பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியாகிய வர்த்தமானி

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டா மீது சர்வதேச மட்டத்தில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, எனவே தாம் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருக்கும் குற்றவியல்…

நாடாளுமன்ற பாதுகாப்பு செயற்பாட்டில் இருந்த ட்ரோன் விபத்துக்குள்ளானது

இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளாா். கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்கவென விமானப்படையினரால் ட்ரோன் விமானங்கள்…

வெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன் அபேகோன் – இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது

22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் தனது தூரத்தை ஓடி எடுத்த நேரம் 10.14 வினாடிகள் ஆகும். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100…

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் – 2022

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் – 2022 கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இருபது நாட்கள் சிறப்புத்திருவிழாக்கள் இடம்பெறுவதுடன் 21ம் நாளான…

த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது!

த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது! தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம்…

A/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்? – அறிவித்தார் கல்வி அமைச்சர்!

2021 க.பொ.தர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்கு இடையே வெளியிடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இன்றைய உரை – தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகவும் குறிப்பிட்டார்!

நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்களே, அதேபோல நானும் எவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் நானும் இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து…

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு Call Centre

கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு Call Centre (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக Call Centre (அழைப்பு நிலையம்) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து…