Month: September 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் – 21 காலை 7.00 மணிமுதல் 4.30 மணிவரை வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல்,21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை…

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம் திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஒழுக்கக்கேடான…

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடு பூரணமாக நீக்க முடிவு – அமைச்சரவை

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடு பூரணமாக நீக்க முடிவு – அமைச்சரவை அனைத்து வாகனங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 பெப்ரவரி முதல் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எக்ஸ் வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு நீதி மற்றும்…

காக்காச்சிவட்டை -விவசாயிகள் களப் பாடசாலையின் அறுவடை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

விவசாயிகள் களப் பாடசாலையின் அறுவடை விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை விவசாய போதனாசிரியர் பிரிவில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ரீ.பவிலேகா தலைமையில் பலாச்சோலை கிராமத்தில் விவசாயிகளுக்கான வயல் பாடசாலை…

ஜ.நா மனித உரிமை பேரவை அமர்வில் தற்போது இலங்கை விடயம் முன்னிலை – எமது கோரிக்கையை வலுப்படுத்த பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்-பா.அரியநேந்திரன்

ஜ.நா மனித உரிமை பேரவை அமர்வில் தற்போது இலங்கை விடயம் முன்னிலை – எமது கோரிக்கையை வலுப்படுத்த பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்! இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும். தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வு இடம்…

ரணிலின் வெற்றி நாட்டுக்கு நன்மை – தீவிர பிரசாரத்தில் மு.இராஜேஸ்வரன்

ரணிலின் வெற்றி நாட்டுக்கு நன்மை – தீவிர பிரசாரத்தில் மு.இராஜேஸ்வரன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினத் மு.இராஜேஸ்வரன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்றைய தினமும் கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேசங்களில்…

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்

2024ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம்…

பொது வேட்பாளருக்கு ஆதரவாக சிறிதரன் எம்.பி தலைமையில் மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல் – சிறிநேசன், கோடிஸ்வரன், அருண்தம்பிமுத்து ஆகியோரும் பங்கேற்பு

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ்…

இலங்கையில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் தொடர்பில் இப்போது…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் கிழக்கிலும் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு…