Category: பிரதான செய்தி

தேசியக்கொடி அரைக்கம்பத்தில்

பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபத்தின் மறைவை அடுத்து நாட்டின் அரச அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தின் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் அமைத்திருக்கும் கொடிக்கம்பத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் செல்லுபடியாகும் காலவரையறை நீக்கம்..!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பிறப்பு சான்றிதழ்கள், மரண மற்றும் திருமண சான்றிதழ்களின் செல்லுப்படியாகும் காலத்தினை வரையறைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதாக அறிக்கை ஒன்றை விடுத்து…

எலிஸபெத் மகாராணி காலமானார்!

பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணி தனது 96 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (08) காலமானார். ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

விகாரையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல : பொய்யான செய்தி எழுதிய ஊடகவியலாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுகிறது : கல்முனை விகாராதிபதி தெரிவிப்பு.

விகாரையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல : பொய்யான செய்தி எழுதிய ஊடகவியலாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுகிறது : கல்முனை விகாராதிபதி தெரிவிப்பு. கல்முனை விகாரையில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதனை நான் தான் செய்ததாகவும் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தியை…

சற்று முன் பதவியேற்றுக்கொண்ட புதிய ராஜாங்க அமைச்சர்கள் – சந்திரகாந்தன் வியாழேந்திரன், ராகவன் ஆகியோருக்கும் அமைச்சுகள்.

இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர் ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு…

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்கு நடவடிக்கை

நாட்டில் பற்றாக்குறையாக காணப்படும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அவசர தேவைக் கருதி கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏறத்தாழ 110 மருந்துகள் வரை தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அவற்றின் மிக…

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்! – ஐநா மனித உரிமைகள் ஆணையர்

“இலங்கையில் தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், வெளிநாட்டிலும் உலகளாவிய அதிகார வரம்பிலும் உள்ள வழிகளைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுக்குமாறு மற்ற நாடுகளைக் கோருகின்றோம். சர்வதேச…

ஜனவரி 25க்குப் பின் ராஜபக்ஷக்களை விரட்டியடிக்கும் வாய்ப்பு ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கும் – வெல்கம

ஜனவரி 25 ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு வருவதற்கான டிக்கெட்டை…

இலங்கைக்கு கிடைக்கும் பல கோடி அமெரிக்க டொலர்கள்

சமூர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இந்த வருட கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் இந்த வருடத்தின் முதல்…

சுகாதாரத் துறையை விரைவில் மறுசீரமைக்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த…