அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் -வேட்பாளர் தவமணி


அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வாக்குகளை பிரிக்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.


ஜனநாய போராளிகள் கட்சி சார்பாக நான் எட்டாம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன்.நம் மக்களின் நலனுக்காக களமாடிய பெண்களில் நானும் ஒருவள். அங்கவீனமான நிலையிலும் எமது தமிழ் மக்களின் நலனுக்காக இன்று தேர்தல் களத்தில் ஒரு பெண்ணாக போட்டியிடுகின்றேன். பெண்களுக்கான அங்கிகாரம் கிடைக்க பெண்கள் பக்கபலமாக செயற்பட வேண்டும் என சங்கு சின்னத்தில் போட்டியிடும் சுப்ரமணியம் தவமணி தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூகத்தின் முதுகெலும்பான பெண்கள் சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் முன்னுக்கு வர வேண்டும். ஆகவே அம்பாறை மாவட்ட தமிழ் பெண்கள் ஒற்றுமையாக சங்கு சின்னத்திற்கும் எனது இலக்கமான 08 க்கும் வாக்களிக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.


அம்பாறை மாவட்ட தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தனித்தனியாக போட்டியிடும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.