-சரவணன்-

அக்கரைப்பற்று நகர பகுதியில் 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நோட்டுக்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்களை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 3 பேரையும் எதிர்வரும் 22 திகதிவரை விளக்கமறியலில்
வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்நேற்று சனிக்கிழமை
உத்தரவிட்டார்.


திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிர தேசத்தில் இந்தக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிளையான் உட்பட கட்சிப் பிரமுகர்கள் சென்று பிரசார நடவடிக்
கையில் ஈடுபட்டனர்.


அச்சமயம் தம்பட்டைவிசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று நகர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வீதி கண்காணிப்பில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கட்சியின் தேர்தல் பிரச்சார
நடவடிக்கை முடிவடைந்து வாகனங்களில் மட்டக்களப்பை
நோக்கி பிரயாணித்துக் கொண்டிருந்தன. அக்கரைப்பற்று
நகர்பகுதியில் சம்பந்தப்பட்ட காரை விசே அதிரடிப்படையினர்
நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன் போது காரில் இருந்தவர்களிடம் இருந்து 5 ஆயிரம்
ரூபா பெறுமதிகான 10 போலி நோட்டுக்கள், காணி உறுதி
கள், மண் அனுமதிப்பத்திரங்கள், 200 துண்டுபிரசுரங்கள்,
மோதிர அளவு எடுக்கும் கேர்வை என்பவை கண்டுபிடிக்கப்
பட்டன. காரில் இருந்த 3 பேர. பொலிஸார் கைது செய்தனர்.
காரையும் மீட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள் மேற்படி கட்சியின் உறுப்பினர்கள்
எனவும் களுவாஞ்சிக்குடியில் கடந்த உள்@ராட்சித் தேர்த
லில் வேட்பாளராக போட்டியிட்ட வரும் 2015 ஆம் ஆண்டு
துப்பாகியுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த
ஒருவரும் அடங்குகின்றார் எனவும் கூறப்பட்டது. இவர்கள்
சித்தாண்டி, மற்றும் வெலிகந்தை தரப்பளை பிரசேத்தைச்
சேர்ந்தவர்கள் என விசேட அதிரடிப்படையினரது ஆரம்பகட்ட
விசாணையில் தெரியவந்துள்ளது.


இதனையடுதது கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைபபற்று பொளிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று
அக்கரைப்பற்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திப

பட்டமையை அடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க
மறியலில் வைக்கப்பட்டனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் மேற்
கொண்டு வருகின்றனர்.