வெல்லும் நிலையிலுள்ள வீட்டுச்சின்த்திற்கு ஒற்றுமையாக வாக்களித்து ஆசனத்தை காப்பாற்றுவோம் – வேட்பாளர் கந்தசாமி இந்துனேஸ்


நடைபெறவுள்ள இந்த பொதுத் தேர்தல்க் களம் அம்பாறையில் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. இந்த காலகட்டத்திலே எங்களது தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்து வாக்குகளை சிதறடிக்காது செயற்பட வேண்டியது அவசியமாகும். புல கட்சிகள் தேசியப்பட்டியலுக்கு வாக்கு சேகரிக்க களம் இறக்கப்பட்டுள்ளன.


வெல்லும் நிலையில் உள்ள வீட்டுச் சின்னத்திற்கு ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களித்து எமது ஆசனத்தை காப்பாற்ற வேண்டியது எமது கடமையாகும் என தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் கந்தசாமி இந்துனேஸ் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தலை அவதானித்திருப்பீர்கள் பல கட்சிகள் வந்து வாக்குகளை பிரித்ததால் எமது ஆசனம் இழக்கப்பட்டிருந்தது. அந்த தவறை நாம் இம்முறை செய்யாது ஒட்டு மொத்த அம்பாறை தமிழரும் ஒன்றிணைந்து எமது ஆசனத்தை பெற தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.