பெரிய நீலாவணை மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : மதுபான சாலை தற்காலிகமாக மூட பிரதேச செயலாளர் உத்தரவு!

பிரபா

பெரிய நீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மூடுமாறு கோரி இன்று காலையில் இருந்து மக்கள் ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னரும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து மகஜர் கையளித்திருந்தனர்.

இன்று காலையில் இருந்து பெருமளவான மக்கள் சவப்பெட்டியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை காணப்பட்டது.
சம்பவ இடத்து வருகை தந்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் மக்களுடன்  கலந்துரையாடி. மது வரி திணைக்களத்துக்கு விடயத்தை தெரியப்படுத்தி உள்ள தகவலையும் அறிவித்ததுடன், மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பதால் அமைதியை ஏற்படுத்த இது தொடர்பாக மது வரி திணைக்களத்துடன் பேசி ஒரு முடிவுக்கு வரும் வரை முதலில் புதிய மதுபான சாலையை தற்காலிகமாக மூடுமாறு மதுபான சாலைக்கு எழுத்து மூலம் அறிவித்தார். மதுபான சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டமும் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது