சிகரம் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

பிரபா

பெரியநீலாவணையில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக கல்விப்பணியை மகத்தான சேவையாக செய்துவரும் சிகரம் கல்வி நிலையம் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று (2024/10/05 ) சிறுவர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து சிறப்பாக நடாத்தியிருந்தது.

சிகரம் அமைப்பின் தலைவர் சந்திரசேகரம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி த ந.ரமேஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பத்ததுடன் கல்வி நிலைய அதிபர் .தங்கவேல் மற்றும் பாவாணர் அக்கரைப்பாக்கியன் , ஓய்வு பெற்ற சுகாதார பரிசோதகர் களுகாசலம் , கிராம உத்தியோகத்தர் வ.கார்த்திக் ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றனர். சிகரம் கல்வி நிலைய இணைப்பாளர் திருமதி.பிரியதர்சினி மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்புடன் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.