அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் சேர்ந்து பயணிக்க தயார் – ரெலோ

அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதால் விட்டுக்கொடுப்புடன் சேர்ந்து பயணிக்க தயார் என ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


ஊடகத்திற்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்காமல் ஓரணியில் இணைந்து போட்டியிட வேண்டியதன் அவசியம் , குறிப்பாக அம்பாறை , திருகோணமலை மாவட்டங்களில் பொது மக்களால் முன்வைக்கப்படுகிறது ஏற்றுக்கொள்கிறோம்.

விட்டுக்கொடுப்புடன் செயற்பட எமது கட்சி தயார். நாங்கள் ஏற்கனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக திருவிளக்கு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்திருந்தோம். தமிழ் மக்கள் பொதுச் சபையும் கேட்டுக்கொண்டதற்கிணங்க சங்கு சின்னத்தில் இந்த இரண்டு மாவட்டத்திலும் போட்டியிட நாம் தயார் என தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் மற்றும் ரெலோ கட்சியின் உப தலைவர் கென்றி மகேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


இந்த தீர்மானத்தை கென்றி மகேந்திரனும் அம்பாறை மாவட்டத்தில் தமது கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்து தெரிவித்திருந்தார்.

You missed