(பிரபா)

பெரியநீலாவணையில் மற்றுமொரு புதிய மதுபானசாலை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்குரிய வேலைகளை சிலர் முன்னெடுத்து வருவதற்கு கிராம மக்கள், ,பொது அமைப்பின் பிரதிநிதிகள்,,மகளீர் அமைப்புக்கள்,,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்றினைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபானசாலை ஒன்று ஏற்கனவே இருப்பதால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளையும்,குடும்பரீதியான பல பிரச்சினைகளையும்,சமூக சீர்கேடுகளையும் சந்தித்து வரும் நிலையில் மற்றுமொரு புதிய மதுபானசாலையை திறந்து கிராமத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம்.எனவே இதை ரத்து செய்யுமாறு கோரிய மகஜர் ஒன்றையும் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் அவர்களிடம் கையளித்தனர்.