இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக் கிளை ஆலய நிர்வாகங்கள் மற்றும் கல்முனையின் பிரதான பொது அமைப்புக்களுடான சந்திப்பின் பின்னர் ஒன்று கூடிய தொகுதிக்கிளை கலந்தாய்வினை செய்ததன் அடிப்படையில் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று முடிவெடுத்துள்ளது.

ஆனால் கட்சி மத்திய குழுவும் தலைமையுமே கல்முனைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதோடு சஜித் பிரேமதாச நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கூறிய வாய்மொழி உடன்பாட்டினை வரவேற்பதோடு மேலும்

சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதன் அடிப்படையிலும் கல்முனை மக்களை நேற்று வரை ஒன்பது வருடங்கள் ரணில் விக்கிரமசிங்க வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் ஆதரவை நிராகரிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்முனை தொகுதி தமிழரசு கட்சி கிளை தலைவர் அ.நிதான்சன் தெரிவித்தார்.

மேலும் சஜித் பிரேமதாசவின் தரப்பின் வெற்றியில் நாமும் பங்குதாரர் ஆகவில்லை எனின் கல்முனைக்கு எதிரான சக்தி தனிப்பலம் பெற்று கல்முனையை ஆக்கிரமிக்கும் என்பதாலும் அதனை தடுக்கும் நோக்கிலும் வெற்றியின் பங்குதாரராக கல்முனை வாழ் தமிழ் மக்களையும் நிலைநிறுத்த இத் தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டது என தெரிவித்தார்