அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடு பூரணமாக நீக்க முடிவு – அமைச்சரவை

அனைத்து வாகனங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 பெப்ரவரி முதல் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


எக்ஸ் வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.


ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால் பொருளாதாரம் வழமைக்கு திரும்பியுள்ளதன் பலனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.