ஜ.நா மனித உரிமை பேரவை அமர்வில் தற்போது இலங்கை விடயம் முன்னிலை – எமது கோரிக்கையை வலுப்படுத்த பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும். தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் இலங்கையில் போர் இடம் பெற்ற விடயம், தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த அநீதி பேசப்படுகிறது . இந்த காலப்பகுதியில் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதபிதித் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் எமது கோரிக்கையை சர்வதேசத்தை நோக்கி முன்வைத்து தமிழ் பொது வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். ஆகவே பொது வேட்பாளர் சின்னமான சங்குக்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து, எமது கோரிக்கையை வலுவடையச் செய்ய வேண்டும், இவ்வாறு தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.