ரணிலின் வெற்றி நாட்டுக்கு நன்மை – தீவிர பிரசாரத்தில் மு.இராஜேஸ்வரன்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினத் மு.இராஜேஸ்வரன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றைய தினமும் கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேசங்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்.

ஒப்பிட்டு ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சாதகமாக இருக்கும், ஆகவே மக்கள் கேஸ் சிலின்டருக்கு புள்ளியடியிட்டு ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச்சசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.