கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் பிரசார விடையங்கள், போன்றவற்றை தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அக்குழு, மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கண்காணிப்பு குழுவினர் நேரடியாக விஜயம் செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகள், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் ஊடகங்களின் சுதந்திர செயற்பாடு சம்பந்தமான விடயங்களை தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

அக்குழு, மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுகின்ற பிரதான வேட்பாளர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கண்காணிப்பு குழுவினர் நேரடியாக விஜயம் செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகள், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் ஊடகங்களின் சுதந்திர செயற்பாடு சம்பந்தமான விடயங்களை தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.