ரணில் மேடையில் சந்திரநேரு சந்திரகாந்தன்.

இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் தனது ஆதரவை தெரிவித்து கல்முனை தொகுதியில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.