‘இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெல்ல வேண்டும்.
வென்று தமிழர்களின் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணுவது முக்கியம்.’

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்னிரவு நேரில் சந்தித்த
போது தெரிவித்திருக்கிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இடம்
பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக நேற்றுயாழ்ப்பாணம் வந்திருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இல்லத்திற்கு வருகை தந்தஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.