தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியது!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியது. இன்றும் நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க முடியும் ,தவறினால் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் , இன்று புதன்கிழமை ( 04 ) ஆரம்பமாகும் இந்த வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேலதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை கொழும்பு மாவட்டத்தில் 27195, கம்பஹா மாவட்டத்தில் 52486, களுத்துறை மாவட்டத்தில் 37361இ காலி மாவட்டத்தில் 41436இ மாத்தறை மாவட்டத்தில் 30882 மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22167 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படிஇ இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 712,319 ஆகும்.

தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தபால் வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.