ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமோ, சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ எதுவாகவும் இருக்கலாம் – யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது – மக்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என வெளியான அறிவித்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த முடிவானது கட்சியின் முடிவாகவோ அல்லது அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களது முடிவாகவோ இருக்கலாம் இது தமிழ் மக்களின் முடிவல்ல தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனும் தெளிவான புரிதல் எமக்கு உள்ளது என பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழரசுக்கட்சியின் ஆதரவு சஜித் பிரமதாசவுக்கு என நேற்று வெளியான அறிவிப்பை தொடர்ந்து கட்சிக்குள்ளும் வெளியிலும் பல எதிர் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.