நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் , எழுதுகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

(பிரபா)


பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் பெரியநீலாணை கமு/ சரஸ்வதி வித்யாலய புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் நேற்றைய தினம்(30 – 08 – 2024) வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்நிகழ்வு இடம் பெற்றது. கட்டார் நாட்டிலே தொழில்புரிந்து வருகின்ற துரைராசா பிரகாஷன் அவர்களால் கட்டாரிலேயே நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை இந்த பென்சில் BOX கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்த பென்சில் BOX களுக்கான எழுதுகருவிகள் மற்றும் ஏனைய பொருட்களை நெக்ஸ்ட் சமூக அமைப்பின் உறுப்பினரான அருளம்பலம் தனு அவர்கள் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் செயலாளர் . வ. கார்த்திக் அவர்களும் பொருளாளர் . கு. கஜேந்திர ராஜ் அவர்களும், பாடசாலையின் அதிபர் திருமதி யோகேஸ்வரி ராமநாதன் அவர்களும், மற்றும் திருமதி கனிஷ்ரலா பிரகாஷன் அவர்களும், கலந்து கொண்டனர்