காஸ் சிலின்டர் சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வெளியிட்ட பதில்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து ஒரு தரப்பினர் முன் வைத்துள்ள முறைப்பாடு அடிப்படையற்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது.’

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். எதிர்வரும் 26 ஆம் திகதி வாக்களிப்பு அட்டைகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு விநி
யோகிக்கப்படும்.


செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்கெடுப்புக்கான வாக்களிப்பு அட்டைகள்
செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும்.


சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னம் குறித்து ஒரு தரப்பினர் தேர்தல்கள் ஆணைக்
குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்கள். இந்த முறைப்பாடு அடிப்படையற்றது.
ஏனெனில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்துக்கு அமைவாகவே எரிவாயு
சிலிண்டர் சின்னம் ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் நபருக்கு சமையல்
சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல்
சட்டத்துக்கும், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கும் இடையில் பாரிய வேறு
பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே,இந்த முரண்பாட்டை நிராகரித்துள்
ளோம். என்றார்.