கல்முனையில் நீலையூர் சுதாவின் ‘ கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா.

(பிரபா)

கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலை,’ 76 சி’ நண்பர்கள் வட்டத்தினதும், கல்முனை வடக்கு கலாச்சார பேரவையினதும் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் சி. சுதாகரன் (நீலையூர் சுதாவின் ) ‘கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா எதிர்வரும் 24 – 8 – 2024. சனிக்கிழமை, காலை 10 மணிக்கு கமு/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில், உவெஸ்லி உயர்தர பாடசாலை முன்னாள் அதிபர் வடிவேல் பிரபாகரன் அதிபர் தலைமையில் நடைபெற உள்ளது.

இன் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சுவாமி காரார்ச்சிதானந்தர், (உதவி பொது முகாமையாளர் இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) அவர்களும், முதன்மை அதிதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியில் ஒரு சகாப்த காலத்துக்கு மேல் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டவரும், கவிஞரும் எழுத்தாளருமான வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன். ( மேலதிக மாகாண பணிப்பாளரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மட்டக்களப்பு.) மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இன் நூல் அறிமுக விழாவிலே அனைவரையும் அன்புடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைக்கின்றனர்.
ஊடக அனுசரணை kalmunainet