தமிழ்ப் பொது வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் முல்லைத்தீவு, வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.