இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3ஆயிரத்து 694 இலங்கையருக்கு தொழில் வாய்ப்புகளுக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.


மேலும் 100 பேர் அங்கு செல்வதற்குத் தயாராகவுள்ளனர் என அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்துக்கும் தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவை நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய இவ்வாறு இலங்கை பணியாளர்களுக்கு அங்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன