2023 ஆண்டு க. பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கலைப்பிரிவில் பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக 12மாணவர்கள் பல்கலை கழகம் செல்ல அனுமதி பெற்றிருந்தனர்.

பாடசாலை முதல்வர் திரு P. கமலநாதன் தலைமையில்
இம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 01.08.2024 அன்று இடம் பெற்றது.

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை (கனடா) அவர்களின் முழுமையான நிதி அனுசரணையில் இந் நிகழ்வு இடம் பெற்றிருந்தது.

சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்கள் கல்வியை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை பரவலாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.