2022ஆம் ஆண்டு பயங்கரவாதிகளை அடக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய மாட்டார். நாட்டின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் எஸ். பி. திஸநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய செய்தி யாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் போது நாடு வங்குரோத்து நிலையடைய வில்லை என்பதை அரசியலுக்கு அப்பாற் பட்ட வகையில்
ஏற்றுக் கொள்ள வேண் டும்.
நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று சவால்களை
வெற்றி கொண்டுள்ளார்.


கோவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான பொருளாதார தாக்கத்தை
ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தனர். ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போதைப்பொருள் பாவனையாளர்கள் கூடாரமிட்டு தேசிய பாதுகாப்பையும் சட்டவாட்சியையும்கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு போராட்டங்களை
முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும்.


ஜனாதிபதியின் சிறந்த திட்டங்களால் குறுகிய காலத்தில் நாடு பொருளாதார
நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது. தற்போதைய முன்னேற்றங்களை தொடர
வேண்டுமாயின் நாட்டின் எதிர் காலத்துக்காகவேனும் ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறவேண்டும் – என்றார்.