( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் லயன் மதுரநாயகம் சுதர்சன் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

 கல்முனை லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும் பல சமூக நிறுவனங்களில் பிரதிநிதித்துவம் வகிப்பவருமான எந்திரி லயன் எம்.சுதர்சன்  கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ எம் எம் ரியால் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஆரம்பக் கல்வியை காரைதீவு இ.கி. மிஷன் ஆண்கள் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கல்லடி சிவானந்த வித்யாலயத்திலும்  மட்டக்களப்பு  மத்திய கல்லூரியிலும் பூர்த்தி செய்தார்.

 மொரட்டுவ பல்கலைக்கழக பட்டதாரியான இவர் தற்பொழுது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.