அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாகப் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் கட்சிச் செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிக்கும்
தொடர்பில்லை எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.


மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்
கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்தவை வருமாறு:-

அனைத்துத் தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்
பாகப் போட்டியிட வேண்டும் என்பதேஎமது நிலைப்பாடு. ஆனால் வீட்டுச்
சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அது வெளியில்
வருவதே சந்தேகம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக
நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்ற வகையில் சிலர் பேசி வருகின்றனர்.


ஆனால் கட்சிச் செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்
பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஷ்ட பாராளுமன்ற
உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளோம். – என்றார்.