சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரண மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடனான கலந்துரையாடலில் இதனை வெளிப்படுத்தினார்.
மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமுகமான சூழலை ஏற்படுத்துவதற்குக் குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளவைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு விடுமுறை வழங்குவது
டன், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களைமீளவும் கடமைக்குத் திரும்பச் செய்து வைத்தியசாலையின்செயற்பாடுகளை முதற்கட்டமாக ஆரம்பிப்பது.


பின்னர், விசாரணைக் குழு ஒன்றை நியமித்து, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள், அவை நீண்டகாலமாக நிவர்த்தி செய்யப்படாமைக்கான காரணம்
மற்றும் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போன்றவை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம் பெற்ற குறைபாடுகளை கண்டித்தும் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் அருச்சுனாவுக்கு ஆதரவு தெரிவித்தும் பெருந்திரளான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். டாக்டர் அருச்சுனா கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டிருந்ததுடன் மக்கள் சம்மதத்துடன் டாக்டர் அருச்சுனா உரிய அதிகாரிகள் அமைச்சர்களை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டு கொழும்பு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.