கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக பெருமளவான மக்கள் குவிந்து கல்முனை மாநகரை முற்றுகையிட்டிருந்தனர்.

செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்திருனர்.

காலை 8.00 மணிமுதல் பி.ப வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன் நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன.

அரச அரச அதிகாரிகளே எமது நியாயமான கோரிக்கைக்கு பதில்என்ன? எனும் விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கல்முனை வடக்கு பிரதேச சிவில் சமூக பிரதிநிதிகள், எட்டுப்பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது அதேவேளை பிரதேச செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறது

தொடர்ந்து மேலதிக தகவல்கள் வரும்