உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள்
நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப்
பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்ட
வேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பை அப்படியே ஏற்று – அந்த உத்தரவுப்படி உரிய வேட்பு மனுக்களை சேர்த்துக்
கொண்டு – அதன் அடிப்படையில் திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தல்களை
மே 6 ஆம் திகதி முழுமையாக நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு
செய்திருப்பதாக நம்பகமாகத் தெரிய வருகிறது.
நன்றி முரசு