(வி.சுகிர்தகுமார் , எஸ்.கார்த்திகேசு , பிரபா)
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக ‘சமுர்த்தி அபிமானி’ புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இரு தினங்கள் ( 9,10 ) இடம் பெறுகிறது
கல்முனை



கல்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் முன்னிலையில் சிறப்பாக இடம் பெற்றது . இதில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான சி.ஜெகராஜன் உட்பட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
ஆலையடிவேம்பு


இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்றும் நாளையும் (9,10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் க.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான சி.ஜெகராஜன் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன்; மற்றும் கௌரவ அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
…….
திருக்கோவில்

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.கண்ணதாசன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்று இருந்ததுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வர்த்தக சந்தையினை நாடா வெட்டி வைபவ ரீதியாக வர்த்தகக் கண்காட்சியினையும் விற்பனையையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனையும் வருடம் தோரும் திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இம்முறையும் மிகசிறப்பான முறையில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் நன்மையடையும் வகையில் வர்த்தக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந்த் நிருவாக உத்தியோகத்தர் மங்களா கிராம நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி சமுர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.