சந்திரகாந்தன் (பிள்ளையான்) , வியாழேந்திரன் இணைவில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாக்கம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரது கூட்டணியில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாகியுள்ளது.
இரு கட்சி செயலாளர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு இரு கட்சி தலைவர்களும் பரிபாரிமாரிக் கொண்டனர்.
கிழக்கு மாகாண தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளோம். கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பதே எமது பிரதான இலக்கு ,எமது கூட்டணிக்கு மக்கள் தமது பேராதரவை வழங்குவார்கள் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.