விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை!

கல்முனையில் கிலோ 2000 ரூபாய்!!

( வி.ரி.சகாதேவராஜா)

 அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது .

கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 2000 ரூபாவிற்கு இன்று விற்கப்பட்டது.

சந்தையில் இந்த விலை என்றால் கிராமங்களில் உள்ள சில்லறைக் கடைகளில் நிலைமை வேறு. கிலோ 2400 வரை விற்கப்படுகிறது.

அதேவேளை, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் என்று மில்லாதவாறு அதிகரித்து வருகின்றன.

நேற்றையதினம் பிரதான சந்தையில் சில மரக்கறிகளின் விலைகள் இவை.

மிளகாய்  -2000

பெ.வெங்காயம்-240

சி.வெங்காயம்-400

உ.கிழங்கு(வெ)-250

உ.கிழங்கு (சி)(நுவரேலி)-550

லீக்ஸ்-700

கரட் (நுவரேலியா)-1000

கரட் – 900

தக்காளி – 200

கோவா- 700

இஞ்சி -2000

வெ.பூண்டு- 700

வோஞ்சி-300

தேசிக்காய்-150

பீட்ரூட்-600

சுரைக்காய் -200

கத்தரிக்காய்- 800

வெண்டிக்காய்-600

பயற்றை – 600

பழப்புளி- 1400

இவ்வாறு பரவலாக விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் மக்கள் திருப்தியாக உண்டு வாழ்வதற்கு திண்டாடுகின்றனர்.