- பிரபா –
- கல்முனையில் நேற்று இரவு 8 மணியளவில் கல்முனை பன்சல வீதியிலே சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலே இருந்த தங்க மாலையை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட நபர் கல்முனை இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
- இந்நபர் கல்முனை குடியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். எனவே வீதியில் தனியாக பயணிக்கின்ற பெண்களே அவதானம்.