பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரி
வித்துள்ளார்.
சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும்
உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுகிறது என்று எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்
பெற்றுள்ளன என்று பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர் என்று தகவல்கள் வந்துள்ளன என்று
அவர் தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையங்களுக்குப் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா
அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, இனிமேல், பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்று பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.