கார்மேல் பற்றிமாவின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்

கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று தொடக்கம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 13 வரை கொண்டாடப்படவுள்ளது.

இதன் தொடக்க விழா அக்டோபர் 13ஆம் தேதி இன்று பாடசாலை முதல்வர் அருட் சகோதரர்.S.E ரெஜினோல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா அடிகளார் பிரதம அதிதிகளாக கலந்து கொள்கிறார்.

விழாவின் கௌரவ அதிதிகளாக கார்மேல் பற்றிமா கல்லூரியின் தொடக்க முதல் இன்று வரை நிர்வகிப்பில் பங்காற்றிய வெவ்வேறு துறவற சபைகளின் மேலாளர்கள் என்ற வகையில் இலங்கை இயேசு சபையின் மாகாண மேலாளர் அருட்தந்தை. சுஜீவ அஞ்சலோ பத்திரன, கார்மேல் கன்னியர் சபை மாகாண மேலாளர் அருட்சகோதரி. M.நிலாந்தி, இலங்கை அன்புச் சகோதரர்கள் சபையின் மாகாண மேலாளர் அருட் சகோ. அன்ரனி கிறிஸ்துராஜா, மற்றும் டீலா சல்லி சகோதரர்கள் துறவற சபையின் கிழக்காசிய பொறுப்பாளர் அருட் சகோதரர் பேற்றன் பெரேரா ஆகியோரும் சிறப்பு அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. MSS .நஜீம் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள், துணை அதிபர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.